logo

"உண்மையை முன்னிலைப்படுத்தும் ஒவ்வொரு செய்தியும் ஒரு மாற்றத்தின் தொடக்கம்."

📜 திருக்குறள்
Clear

குறள் 1063 குடியியல்

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்.

பொருள்

வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.

கலைஞர் உரை

வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1064 குடியியல்

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்

காலும் இரவொல்லாச் சால்பு.

பொருள்

வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.

கலைஞர் உரை

வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1065 குடியியல்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

உண்ணலின் ஊங்கினிய தில்.

பொருள்

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1066 குடியியல்

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு

இரவின் இளிவந்த தில்.

பொருள்

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

கலைஞர் உரை

தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1067 குடியியல்

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று.

பொருள்

இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.

கலைஞர் உரை

கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1068 குடியியல்

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்

பார்தாக்கப் பக்கு விடும்.

பொருள்

இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.

கலைஞர் உரை

இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல் நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1069 குடியியல்

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள

உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

பொருள்

இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

கலைஞர் உரை

இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1070 குடியியல்

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்

சொல்லாடப் போஒம் உயிர்.

பொருள்

இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

கலைஞர் உரை

இருப்பதை ஒளித்துக்கொண்டு இல்லை என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?.

அதிகாரம் 107 : இரவச்சம் பொருட்பால்
குறள் 1071 குடியியல்

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.

பொருள்

மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

கலைஞர் உரை

குணத்தில் கயவராக இருப்பர். ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார். மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

அதிகாரம் 108 : கயமை பொருட்பால்
குறள் 1072 குடியியல்

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத்து அவலம் இலர்.

பொருள்

நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

கலைஞர் உரை

எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!.

அதிகாரம் 108 : கயமை பொருட்பால்
திருவள்ளுவர்

திருவள்ளுவர்

திருக்குறள்

"படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்."

🔸 கலைஞர் உரை

உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உள்ளது. மனித வாழ்க்கைக்கும் அறிவுக்கும் அடிப்படை ஆதாரம் மிக முக்கியமானது என்பதை உணர்த்துகிறது.

அதிகாரம்: 1 | குறள்: 172

🔥 பிரபல செய்திகள்

மேலும்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

2 days ago

ஐரோப்பிய நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம்: முதலீடுகளை ஈர்க்க பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா செல்லும் பிரதமர் மோடி!

1 week ago

மாவட்டத்தின் அடையாளம் முதல் விலகல் வரை: தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்களின் முழு பின்னணி!

2 weeks ago

💰 மார்க்கெட் அப்டேட்ஸ்

🟡 தங்கம்₹16,091/g
⚪ வெள்ளி₹300/g
📈 சென்செக்ஸ்75,084.78

🌤 வானிலை

34°C

தூத்துக்குடி

Cloudy | Humidity 57%

world map
logo

“தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பெற்றுள்ள இன்றைய உலகில், நவீன காலகட்டத்தின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சமூக மாற்றத்தை புரிந்துகொண்டு, நலம் தரும் செய்திகளை உடனுக்குடனும், உண்மைத் தகவல்களுடன் வழங்குவது தான் நமது நோக்கம்.”

Contact us: onepixeldigitalmedia@gmail.com

© 2026 ONEPIXEL DIGITAL MEDIA. All Rights Reserved. | Design & Developed by ONEPIXEL TECHNOLOGIES
OnePixel Logo
ONEPIXEL DIGITAL MEDIA
TAMIL NEWS & DIGITAL CONTENT
திருவள்ளுவர்
திருவள்ளுவர்
திருக்குறள்

பொருள்
கலைஞர் உரை
🌐 WWW.ONEPIXELDIGITALMEDIA.COM